இந்தியச் சிந்தனை மரபில் செவ்வியல் இலக்கியங்கள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

(பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது)

தேசியத் தர மதிப்பீட்டுக் குழுமத்தால் (NAAC) 4வது சுழற்சியில் A++ Grade (CGPA 3.75/4) தகுதி பெற்றது.

திருச்சிராப்பள்ளி – 620 002. தமிழ்நாடு, இந்தியா.


 

தமிழாய்வுத்துறை இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்

PDF BROCHURE

இணை அமைப்பாளர்கள்:

  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியா
  • முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், தேனி
  • தமிழ் மணம் சர்வதேசத் தமிழாய்விதழ் (ISSN: 3049-0723) (A Peer-reviewed Tamil Journal, following New UGC Rules, offers open access and an international, multidisciplinary scope)

கருத்தரங்கப் பொருண்மை: இந்தியச் சிந்தனை மரபில் செவ்வியல் இலக்கியங்கள்

(Indian tradition of thought in Tamil Classical literature)


அழைப்பும் அறிவிப்பும்

அன்புடையீர் வணக்கம்!

திருச்சிராப்பள்ளியில் பெண்களுக்கெனச் செயல்படும் புகழ்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுள் ஒன்றான புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, தென்னிந்தியாவின் தொன்மையான கல்லூரிகளில் நூற்றாண்டைக் கடந்து முதன்மையுடன் திகழ்கிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுச் சிறப்புறச் செயல்பட்டுவரும் இக்கல்லூரி, 2020ஆம் ஆண்டு நான்காம் சுழற்சியில் தேசியத் தர மதிப்பீட்டுக் குழுமத்தால் NAAC A++ Grade (CGPA 3.75/4) பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

இத்தகு பெருமை வாய்ந்த புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் தமிழாய்வுத்துறை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், தேனி மற்றும் தமிழ் மணம் சர்வதேசத் தமிழாய்விதழ் ஆகியவற்றுடன் இணைந்து “இந்தியச் சிந்தனை மரபில் செவ்வியல் இலக்கியங்கள்” என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றினை நடத்த உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

இக்கருத்தரங்கில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களை அன்புடன் அழைக்கிறோம். ஆய்வு நெறிகளுக்குட்பட்ட புதிய சிந்தனைகளை உள்ளடக்கிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.


கருத்தரங்கின் நோக்கங்கள்

பழந்தமிழ்ச் சமூகம் அறிவுத் தேடலில் சிறந்து விளங்கியது. அரசியல், அறிவியல், அறவியல், கலைகள், தொழில்நுட்பம், மேலாண்மை, இயற்கை, எதிர்காலவியல், தொலைநோக்குச் சிந்தனைகள் எனப் பல்துறை அறிவுத் தளங்களில் அவர்களது தேடல்கள் விரிவடைந்தன. இத்தகைய அறிவு வளமும், சமூக விழுமியங்களும் தமிழ்மொழியின் இலக்கண அரண், இலக்கிய வளம் ஆகியவற்றால் நிலைபெற்று செவ்வியல் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன.

தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் உரை போன்ற சங்க மற்றும் செவ்வியல் கால இலக்கியங்களில் வரலாற்றுப் பின்னணியுடன் ஆழமாகப் பதிந்துள்ள இந்தியச் சிந்தனை மரபுகளைப் புதிய பார்வையிலும், விரிவான தளத்திலும் வெளிக்கொணருதலே இக்கருத்தரங்கின் முதன்மையான நோக்கமாகும். இதன்வழி, பழந்தமிழர்களின் அறிவுச் செழுமையையும், இந்தியச் சிந்தனை மரபில் அதன் பங்களிப்பையும் ஆய்வுக்குட்படுத்துவதே இக்கருத்தரங்கின் குறிக்கோளாகும்.

கருத்தரங்கு – ஆய்வுக் கட்டுரைச் சமர்ப்பிப்பு அழைப்பு

ஆய்வுக் கட்டுரைத் தலைப்புகள் (கருத்தரங்கப் பொருண்மை):

செவ்வியல் இலக்கியங்களோடு தொடர்புடைய பின்வரும் தலைப்புகளின் கீழ் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம்:

  • பழந்தமிழரின் தொலைநோக்குப் பார்வை
  • சங்க இலக்கியத்தில் மேலாண்மை
  • சங்க இலக்கியத்தில் தொழில்நுட்பவியல்
  • பண்டைய மருத்துவ முறைகள்
  • தொல்காப்பியரின் உயிரியல் அறிவு
  • தொல்காப்பியத்தில் உளவியல்
  • இரட்டைக்காப்பியங்களில் சமயநெறிகள்
  • சிலம்பில் இயற்கை வளமும் உயிரின வளமும்
  • சங்க தமிழரின் இசையறிவு
  • சங்க கால அரசு உருவாக்கம்
  • தமிழரின் அறிவியல் அறிவு
  • பண்பாட்டு நெறிகள்
  • சமூக விழுமியங்கள்
  • கலைகள் – தகவல் ஊடகம்
  • சமுதாய ஆவணங்கள்
  • சங்ககால போர்முறைகள்
  • புறநானூற்றில் தத்துவங்கள்
  • உலகப் பொதுமறையில் ஒழுகலாறுகள்
  • அக இலக்கியங்களில் உளவியல் அணுகுமுறைகள்
  • முத்தொள்ளாயிரத்தில் ஆட்சிமுறை
  • முத்தொள்ளாயிரத்தில் பொருளாதாரம்
  • தமிழரின் வானியல் அறிவு
  • இறையனார் களவியல் உரையின் சொல்வளம்
  • பதினெண் கீழ்க்கணக்கில் மருந்து
  • செவ்வியல் இலக்கியங்களில் செயற்கை நுண்ணறிவு

ஆய்வுக் கட்டுரைச் சமர்ப்பிப்பு வழிகாட்டுதல்கள்

  • கட்டுரையின் நீளம்: ஆய்வுக் கட்டுரை 7 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • தட்டச்சு விதிமுறைகள்:
    • ஒருங்குறி (Unicode) எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டும்.
    • எழுத்துரு அளவு 12 புள்ளிகளாக இருக்க வேண்டும்.
    • வரி இடைவெளி 1.5 அளவாக இருக்க வேண்டும்.
    • கட்டுரையைச் சொற்கோப்பு வடிவத்தில் (Word Format – .doc அல்லது .docx) அனுப்ப வேண்டும்.
  • பங்கேற்போர்: பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் என அனைவரும் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம்.
  • கட்டுரையின் பொருண்மை: கட்டுரை கருத்தரங்கின் முக்கியப் பொருண்மைக்கு ஏற்ற வகையில் அமைய வேண்டும்.
  • கட்டுரையாளர் விவரங்கள்: ஆய்வுக் கட்டுரையில் கட்டுரையாளரின் பெயர், கல்விசார் முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை சரியான முறையில் பிழையின்றிக் குறிப்பிடப்பட வேண்டும்.
  • கட்டுரையின் அமைப்பு: ஆய்வுக் கட்டுரையில் ஆய்வுச்சுருக்கம், முன்னுரை, உட்தலைப்புகள், சான்றெண் விளக்கம் (அடிக்குறிப்புகள்), கலைச்சொற்கள் (தேவையெனில்), துணைநூற்பட்டியல் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.
  • தன்மை: ஆய்வுக் கட்டுரை ஆய்வாளரின் சொந்த முயற்சியில் அமைந்ததாய் இருத்தல் வேண்டும்.
  • துணைநூற்பட்டியல்: கட்டுரையை எழுதப் பயன்படுத்தப்பட்ட நூல்கள், ஆய்விதழ்கள் மற்றும் பிற தரவுகள் அனைத்தும் துணைநூற்பட்டியலில் சரியான முறையில் அகர வரிசையில் பட்டியலிடப்பட வேண்டும்.
  • திருத்தும் உரிமை: கட்டுரைகளைத் திருத்துவதற்கும், குறிப்பிட்ட சிலவற்றை நீக்குவதற்கும் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
  • வெளியீடு: ஆய்வுக் கட்டுரைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, ISSN எண்ணுடன் கூடிய ஆய்விதழில் வெளியிடப்படும்.

முக்கியத் தேதிகள் மற்றும் விவரங்கள்:

  • கருத்தரங்கம் நடைபெறும் நாள்: 06.08.2025
  • கட்டுரை சமர்ப்பிக்க இறுதி நாள்: 05.07.2025
  • கட்டுரை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள்:

கட்டண விவரம் மற்றும் சமர்ப்பிப்பு:

  • பதிவுக் கட்டண விவரம்:
    • பேராசிரியர்கள்: ரூ. 1500
    • ஆய்வு மாணவர்கள்: ரூ. 700
  • கட்டணச் சான்று: பதிவுக் கட்டணம் செலுத்தியதற்கான சான்று (Proof) கட்டுரையின் உடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

முக்கிய இணைப்புகள்:

கட்டணம் செலுத்த வேண்டிய விவரங்கள்:

  • வங்கியின் பெயர் (Bank Name): State Bank of India
  • பயனாளி பெயர் (Beneficiary Name): PRINCIPAL HOLY CROSS COLLEGE
  • கிளை (Branch): Trichy Town
  • கணக்கு எண் (Account Number): 32993766567
  • IFSC Code: SBIN0001312

கருத்தரங்கக் குழுவினர் விவரம்

ஒருங்கிணைப்பாளர்கள்

  • முனைவர் தா. லதா (உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை)
  • முனைவர் சு. அனுலெட்சுமி (உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை)
  • திருமிகு. இராஜேந்திரன் பெருமாள் (மேனாள் தலைவர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்)
  • திருமிகு. மோகனன் பெருமாள் (தலைவர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், கோலாலம்பூர், மலேசியா)
  • எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி (முத்துக்கமலம் மின்னிதழ், தேனி)

ஆலோசனைக் குழு

  • முனைவர் அ. ஜெஸிந்தாராணி (இணைப்பேராசிரியர்)
  • முனைவர் ம. பிரேமா (துறைத்தலைவர்)

பதிப்புக் குழு

  • முனைவர் ஆ. தேவதா
  • முனைவர் க. சுஜாதா
  • முனைவர் ஆ. ஷர்மி
  • முனைவர் கு. டாலி ஆரோக்கியமேரி
  • திருமிகு. மன்னர் மன்னன் மருதை (மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்)

கருத்தரங்கக் குழு உறுப்பினர்கள்

  • முனைவர் கோ. விஜயலெட்சுமி
  • முனைவர் இரா. பபித்ரா
  • முனைவர் ஞா. எலிசபத் ராணி
  • முனைவர் வெ. பிரேமலதா
  • முனைவர் அ. அருள் சகாய அனிட்டா
  • முனைவர் தே. அனித்தா மேரி
  • முனைவர் அ. அனுடயானா
  • முனைவர் பா. இமாகுலேட்
  • முனைவர் ச. கௌசல்யா
  • முனைவர் ச. புனிதா
  • முனைவர் செ. நான்சி
  • முனைவர் து. நீலாதேவி
  • முனைவர் த. பத்மா

தொடர்புக்கு

  • முனைவர் தா. லதா – 9626734819
  • முனைவர் சு. அனுலெட்சுமி – 7598852072

பன்னாட்டுக் கருத்தரங்கம் – 2025 தலைப்பு: இந்தியச் சிந்தனை மரபில் செவ்வியல் இலக்கியங்கள்

பதிவுப் படிவம்

பங்கேற்பாளர் விவரங்கள்:

  1. பெயர்:
  2. கல்வித்தகுதி:
  3. தற்போதைய நிலை (பணிபுரிபவர் / பயில்பவர்):
  4. நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி:
  5. அலைபேசி எண்:
  6. மின்னஞ்சல் முகவரி:

பதிவுக் கட்டணம் செலுத்திய விவரம்:

  1. செலுத்திய நாள்:
  2. வங்கியின் பெயர்:
  3. வங்கியின் கிளை:
  4. பணப் பரிவர்த்தனை விவரம் (ரசீது எண் / பரிவர்த்தனை ஐடி):

ஆய்வுக்கட்டுரைச் சமர்ப்பிப்பு மற்றும் ஒப்புதல்:

நான் சமர்ப்பிக்கும் ஆய்வுக்கட்டுரையின் பொருண்மை (தலைப்பு):

 

நான் இக்கருத்தரங்கின் நெறிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, கருத்தரங்க நிகழ்வுகளில் கலந்துகொள்ள முழு மனதுடன் ஒப்புதல் அளிக்கிறேன்.

பங்கேற்பாளரின் கையொப்பம்:

இடம்: நாள்:

Related posts

செயற்கை நுண்ணறிவு (AI): நமது எதிர்காலத்தை மாற்றியமைக்கும் தொழில்நுட்பம்

சங்க காலத்தில் மட்பாண்டக் கலைகள்: தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் வழியாக ஓர் ஆய்வு

பழங்காலத் தமிழரின் வணிக நுட்ப அறிவு: ஒரு ஆய்வு